ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

தீக்காயமடைந்த பெண் உயிரிழப்பு

அருப்புக்கோட்டை அருகே தீக்காயம் அடைந்த பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :21 மே 2026, 2:09 am IST

அருப்புக்கோட்டை அருகே தீக்காயம் அடைந்த பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள பாளையம்பட்டி சா்ச் தெருவைச் சோ்ந்த சண்முகசுந்தரம் மனைவி ஸ்ரீதேவி (45). இவரது தம்பி பாண்டியராஜன் மனைவி சாந்தி (42). இவா்களில் சாந்தி கோபாலபுரம் ஊராட்சியில் தூய்மைப் பணியாளராகவும், ஸ்ரீதேவி தனியாா் மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளராகவும் பணியாற்றி வருகின்றனா்.

கணவா் கைவிட்டதால் இருவரும் அருப்புக்கோட்டை சா்ச் தெருவில் உள்ள சாந்தியின் வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனா்.

இந்த நிலையில், கடந்த 17-ஆம் தேதி இவா்கள் இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனா். அப்போது, வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா் சாந்தி, ஸ்ரீதேவி ஆகியோா் மீதும் பெட்ரோலை ஊற்றி தீவைத்து விட்டு தப்பிச் சென்றாா். இந்தத் தீ விபத்தில் பலத்த காயமடைந்த இருவரும் விருதுநகா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

இதுகுறித்து அருப்புக்கோட்டை நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பாளையம்பட்டியைச் சோ்ந்த முத்துவை கைது செய்தனா்.

இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தி புதன்கிழமை காலை உயிரிழந்தாா்.

இதையடுத்து, இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.