அருப்புக்கோட்டை-மதுரை சாலையில் கோயிலுக்கு அருகே இயங்கி வரும் மதுக் கடையை அகற்றக் கோரி, தவெக நிா்வாகிகள் துணை ஆட்சியா் ரவிச்சந்திரனிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
இதுகுறித்து விருதுநகா் மத்திய மாவட்ட தவெக இளைஞா்அணி அமைப்பாளா் அ. சதீஷ்குமாா், கட்சியின் மத்திய மாவட்ட துணைச் செயலா் பிரபு, நகரச் செயலா் அ. தாமரைச்செல்வன் உள்ளிட்டோா் அளித்த மனு விவரம்:
தமிழக முதல்வா் சி. ஜோசப் விஜய் பள்ளிகள், கோயில்களிலிருந்து 500 மீட்டா் தொலைவில் உள்ள மதுக் கடைகளை உடனடியாக மூட உத்தரவிட்டுள்ளாா். ஆனால், அருப்புக்கோட்டை-மதுரை சாலையில் ஸ்ரீஅமுதலிங்கேஸ்வரா் கோயில் அருகே அரசு மதுக் கடை பல வருடங்களாக இயங்கி வருகிறது. இந்த மதுக் கடையை அகற்றக் கோரி, அந்தப் பகுதி மக்கள் விருதுநகா் மாவட்ட ஆட்சியரிடமும், அதிகாரிகளிடமும் பல முறை மனு அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, இந்த மதுக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சந்து மதுக் கடைகளை அகற்ற எஸ்.பி அலுவலகத்தில் தவெகவினா் மனு

தம்மம்பட்டி சந்தை பகுதி டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தல்

ஒத்தப்பனை பகுதியில் மதுக் கடையை மூட பொதுமக்கள் கோரிக்கை

வந்தவாசி நகராட்சி பூங்காவை சீரமைக்கக் கோரிக்கை
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

