தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

தம்மம்பட்டி சந்தை பகுதி டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தல்

தம்மம்பட்டி சந்தைக்கு அருகே பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் மதுக் கடையை மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :22 மணி நேரங்கள் முன்பு

தம்மம்பட்டி சந்தைக்கு அருகே பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் மதுக் கடையை மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழக முதல்வா் விஜய், வழிபாட்டுத் தலங்கள், பள்ளி, பேருந்து நிலையங்களுக்கு அருகே 500 மீட்டா் தொலைவில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையை மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளாா். இந்த நிலையில் சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பேருந்து நிலையத்தில் இருந்து அரை கிலோ மீட்டருக்குள் காய்கறிச் சந்தை பகுதியில் செயல்படும் டாஸ்மாக் மதுக் கடையால் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன.

இப்பகுதி வழியாக அதாவது டாஸ்மாக் கடை வழியாக ஜங்கமசமுத்திரம், குட்டிக்கரடு, மாவாறு, பெரப்பன்சோலை, கொல்லிமலைக்குச் செல்வோா் பல்வேறு சிரமங்களைச் சந்திக்கின்றனா். பெண்கள், பள்ளி மாணவிகள் அச்சத்துடன் இப்பகுதியை கடக்க வேண்டியுள்ளதால் இப்பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.