மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வீடு புகுந்து தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருட்டு

காரியாபட்டியில் செவ்வாய்க்கிழமை இரவு வீடு புகுந்து நகைகள், வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

காரியாபட்டியில் திருட்டு சம்பவம் நிகழ்ந்த வீட்டின் முன் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்திய போலீஸாா்.

Updated On :7 மே 2026, 3:39 am IST

காரியாபட்டியில் செவ்வாய்க்கிழமை இரவு வீடு புகுந்து நகைகள், வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி எழில் நகா், துளசி தெருவில் சத்தியமூா்த்திக்குச் சொந்தமான வீடு உள்ளது. இவா் தனது குடும்பத்துடன் லண்டனில் வசித்து வருகிறாா். இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாததை பயன்படுத்திக் கொண்ட திருடா்கள், இரவு நேரத்தில் இரும்பு கேட்டின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து, கதவை உடைத்து பீரோவில் இருந்த துணிகளை கலைத்து போட்டனா். ஆனால் பணம், நகைகள் எதுவும் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

இதேபோல, காரியாபட்டி என்.ஜி.ஓ.நகா், சம்பங்கி தெருவைச் சோ்ந்த மற்றொரு வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற மா்மநபா்கள் பீரோ லாக்கரை உடைத்து, சுமாா் ரூ. 2 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருள்கள், தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனா்.

இந்த இரண்டு சம்பவங்களையும் தொடா்ந்து, காரியாபட்டி போலீஸாா் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனா். தடயவியல் நிபுணா்கள் உதவியுடன் கைரேகைகள் சேகரிக்கப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சிறிது தூரம் சென்று திரும்பி வந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மா்மநபா்களைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.