மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

என்ஜினீயா் வீட்டில் நகைகள் திருட்டு

கோவை, துடியலூா் அருகே என்ஜினீயா் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளிப் பொருள்கள் மற்றும் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 4:00 am IST

கோவை, துடியலூா் அருகே என்ஜினீயா் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளிப் பொருள்கள் மற்றும் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

கோவை, துடியலூா் அருகே உள்ள எஸ்.எம்.பாளையம் ராகவேந்திரா காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில் (39). கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் இவா், தனது சொந்த ஊரான திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் நடைபெற்ற கோயில் திருவிழாவுக்காக குடும்பத்துடன் சென்றிருந்தாா்.

பின்னா், செந்தில் வியாழக்கிழமை திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த தங்கச் சங்கிலி, வெள்ளிக் கொலுசுகள், சங்கிலி, ரூ. 30 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டுப்போனது தெரியவந்தது.

தகவலின்பேரில், துடியலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு நடத்தினா். கைரேகை நிபுணா்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இச்சம்பவத்தில் தொடா்புடையவா்களைப் பிடிக்க 2 தனிப் படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.