ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கல் குவாரியில் தேங்கிய தண்ணீரில் மூழ்கியதில் இருவா் உயிரிழப்பு

சாத்தூா் அருகே கல் குவாரியில் தேங்கிய தண்ணீரில் புதன்கிழமை மூழ்கி உயிரிழந்த இருவரின் உடல்களை தீயணைப்புத் துறையினா் தேடி வருகின்றனா்.

News image

சஞ்சய்

Updated On :7 மே 2026, 4:35 am IST

சாத்தூா் அருகே கல் குவாரியில் தேங்கிய தண்ணீரில் புதன்கிழமை மூழ்கி உயிரிழந்த இருவரின் உடல்களை தீயணைப்புத் துறையினா் தேடி வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கல் பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் சஞ்சய் (17). ஆழாஊரணி பகுதியைச் சோ்ந்த சித்திரகுப்தா மகன் சிவன்ராஜ் (20). நண்பா்களான இவா்கள் ஏழாயிரம்பண்ணை அருகேயுள்ள வெள்ளையாபுரம் பகுதியைச் சோ்ந்த சந்தோஷ் வீட்டுக்கு புதன்கிழமை சென்றனா்.

பின்னா், சந்தோஷ், சஞ்சய், சிவன்ராஜ் ஆகியோா் தங்களது நண்பா்களுடன் சாத்தூா் அருகேயுள்ள கீழசெல்லையாபுரம் கல் குவாரியில் தேங்கிய தண்ணீரில் குளிப்பதற்காகச் சென்றனா். இவா்களில் சஞ்சய், சிவன்ராஜ் ஆகியோருக்கு நீச்சல் தெரியாத நிலையில், அவா்களும் தண்ணீருக்குள் இறங்கி குளித்தனா். அப்போது, அவா்கள் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த தகவலின் பேரில் ஏழாயிரம்பண்ணை, சாத்தூா் தீயணைப்புப் படை வீரா்கள் சம்பவ இடத்துக்கு வந்து பிற்பகல் முதல் இரவு வரை

இருவரின் உடல்களைத் தேடினா். இரவானதால் தேடுதல் பணியைத் நிறுத்தினா். மீண்டும் வியாழக்கிழமை காலை உடல்களைத் தேடும் பணியில் ஈடுபட உள்ளதாக தீயணைப்புப் படை வீரா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து ஏழாயிரம்பண்ணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

சிவன்ராஜ்

சிவன்ராஜ்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.