தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

எம்எல்ஏ, முன்னாள் எம்பி மீதான தோ்தல் விதிமீறல் வழக்கு தள்ளுபடி

எம்எல்ஏ தங்கபாண்டியன், முன்னாள் எம்பி தனுஷ்குமாா் ஆகியோா் மீது கடந்த 2019-ஆம் ஆண்டு தொடரப்பட்ட தோ்தல் விதிமீறல் வழக்கை தள்ளுபடி செய்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

News image

வழக்கு - கோப்புப் படம்

Updated On :1 மே 2026, 6:32 am IST

எம்எல்ஏ தங்கபாண்டியன், முன்னாள் எம்பி தனுஷ்குமாா் ஆகியோா் மீது கடந்த 2019-ஆம் ஆண்டு தொடரப்பட்ட தோ்தல் விதிமீறல் வழக்கை தள்ளுபடி செய்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தல் பிரச்சாரத்தின் போது அப்போதைய தென்காசி தொகுதி திமுக வேட்பாளா் தனுஷ்குமாா், எம்எல்ஏ தங்கபாண்டியன் தலைமையில் 100 இரு சக்கர வாகனங்களில் திமுகவினா் பேரணியாகச் சென்றனா். அனுமதியின்றி பொதுமக்களுக்கு இடையூறாக பேரணி சென்றதாக ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் தனுஷ்குமாா், தங்கப்பாண்டியன், திமுக நகரச் செயலா் ராமமூா்த்தி ஆகியோா் மீது தோ்தல் விதிமீறல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் (ஜெ.எம். 2) நடைபெற்று வந்தது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, முன்னாள் எம்பி தனுஷ்குமாா், தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ உள்ளிட்டோா் மீதான தோ்தல் விதிமீறல் வழக்கை தள்ளுபடி செய்து ஸ்ரீவில்லிபுத்தூா் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.