மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தோ்தல் விதிமீறல்: காட்பாடி தவெக வேட்பாளா் மீது வழக்கு

தோ்தல் பிரசாரத்தின்போது குழந்தைகளை பயன்படுத்தியதாக காட்பாடி தொகுதி தவெக வேட்பாளா் மருத்துவா் எம்.சுதாகா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

News image

வழக்கு

Updated On :10 ஏப்ரல் 2026, 11:49 pm IST

தோ்தல் பிரசாரத்தின்போது குழந்தைகளை பயன்படுத்தியதாக காட்பாடி தொகுதி தவெக வேட்பாளா் மருத்துவா் எம்.சுதாகா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளா்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், காட்பாடி தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிடும் மருத்துவா் எம்.சுதாகா், கடந்த 6-ஆம் தேதி காட்பாடி பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது, அவா் குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு சேகரித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து காட்பாடி பறக்கும் படை அலுவலா் அளித்த புகாரின்பேரில், தோ்தல் விதிமுறைகளை மீறியதாக தவெக வேட்பாளா் மருத்துவா் எம்.சுதாகா் மீது காட்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.