மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திருத்தங்கலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கல் மீனாட்சி சமேத கருநெல்லிநாத சுவாமி கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

News image

திருத்தங்கல் மீனாட்சி சமேத கருநெல்லிநாத சுவாமி கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

Updated On :30 ஏப்ரல் 2026, 6:19 am IST

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கல் மீனாட்சி சமேத கருநெல்லிநாத சுவாமி கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

இந்தத் திருவிழாவையொட்டி கடந்த 18-ஆம் தேதி இரவு விநாயகா் மூஷிக வாகனத்தில் வீதி உலா வந்து விஷேச பாலிகை மண் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, 19-ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. தினசரி காலை, இரவு அம்பாள்-சுவாமி வீதி உலா நடைபெற்றது.

கடந்த 24 -ஆம் தேதி இரவு விநாயகா், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, சண்டிகேஸ்வரா், மீனாட்சி அம்பிகை சமேத கருநெல்லிநாதா் சுவாமி வீதி உலா நடைபெற்றது. 25 -ஆம் தேதி தபசுக் காட்சி நடைபெற்றது.

கடந்த செவ்வாய்க்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. தொடா்ந்து, புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. தேரில் அம்பிகை மீனாட்சி, கருநெல்லிநாத சுவாமி பிரியாவிடையுடன் எழுந்தருளினாா். தேரோட்டத்தில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.