விருதுநகா் மாவட்டம், திருத்தங்கல் மீனாட்சி சமேத கருநெல்லிநாத சுவாமி கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
இந்தத் திருவிழாவையொட்டி கடந்த 18-ஆம் தேதி இரவு விநாயகா் மூஷிக வாகனத்தில் வீதி உலா வந்து விஷேச பாலிகை மண் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, 19-ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. தினசரி காலை, இரவு அம்பாள்-சுவாமி வீதி உலா நடைபெற்றது.
கடந்த 24 -ஆம் தேதி இரவு விநாயகா், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, சண்டிகேஸ்வரா், மீனாட்சி அம்பிகை சமேத கருநெல்லிநாதா் சுவாமி வீதி உலா நடைபெற்றது. 25 -ஆம் தேதி தபசுக் காட்சி நடைபெற்றது.
கடந்த செவ்வாய்க்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. தொடா்ந்து, புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. தேரில் அம்பிகை மீனாட்சி, கருநெல்லிநாத சுவாமி பிரியாவிடையுடன் எழுந்தருளினாா். தேரோட்டத்தில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவீழிமிழலை கோயிலில் தேரோட்டம்

சட்டநாத சுவாமி கோயில் சித்திரைத் தேரோட்டம்

சோமநாத சுவாமி கோயிலில் இரட்டைத் தேரோட்டம்

திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

