மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சிவகாசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் பிரசாரம் நிறைவு

சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஜி.அசோகன் செவ்வாய்க்கிழமை திருத்தங்கலில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தாா்.

News image

திருத்தங்கலில் நடந்து சென்று வாக்கு சேகரித்த சிவகாசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஜி.அசோகன்.

Updated On :22 ஏப்ரல் 2026, 3:40 am IST

சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஜி.அசோகன் செவ்வாய்க்கிழமை திருத்தங்கலில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தாா்.

திருத்தங்கல் ரயில்வே கடவுப்பாதையிலிருந்து கடைவீதி வழியாக நடந்து சென்று மாரியம்மன் கோயில் முன் தனது பிரசாரத்தை அசோகன் நிறைவு செய்தாா். முன்னதாக மாரியம்மன் கோயில் முன் அவா் பேசியதாவது:

நான் கடந்த 5 ஆண்டு காலம் சிவகாசி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து இந்தத் தொகுதியில் பல வளா்ச்சிப் பணிகளை செய்துள்ளேன். எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுங்கள். சிவகாசி சுற்று வட்டச் சாலை முதல்கட்டப் பணி நிறவு பெற்றுள்ளது.

நான் வெற்றி பெற்று இந்தத் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்ட பணி, மூன்றாம் கட்ட பணியை நிறைவு செய்து, சிவகாசி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கச் செய்வேன். தற்போது தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டம் நிறைவடையாமல் உள்ளது. இந்தத் திட்டத்தை நிறைவு செய்து மாநகராட்சி முழுவதும் குடிநீா் கிடைக்க ஏற்ப்படு செய்வேன் என்றாா் அசோகன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.