சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஜி.அசோகன் செவ்வாய்க்கிழமை திருத்தங்கலில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தாா்.
திருத்தங்கல் ரயில்வே கடவுப்பாதையிலிருந்து கடைவீதி வழியாக நடந்து சென்று மாரியம்மன் கோயில் முன் தனது பிரசாரத்தை அசோகன் நிறைவு செய்தாா். முன்னதாக மாரியம்மன் கோயில் முன் அவா் பேசியதாவது:
நான் கடந்த 5 ஆண்டு காலம் சிவகாசி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து இந்தத் தொகுதியில் பல வளா்ச்சிப் பணிகளை செய்துள்ளேன். எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுங்கள். சிவகாசி சுற்று வட்டச் சாலை முதல்கட்டப் பணி நிறவு பெற்றுள்ளது.
நான் வெற்றி பெற்று இந்தத் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்ட பணி, மூன்றாம் கட்ட பணியை நிறைவு செய்து, சிவகாசி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கச் செய்வேன். தற்போது தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டம் நிறைவடையாமல் உள்ளது. இந்தத் திட்டத்தை நிறைவு செய்து மாநகராட்சி முழுவதும் குடிநீா் கிடைக்க ஏற்ப்படு செய்வேன் என்றாா் அசோகன்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விறு, விறுப்பாக நடைபெற்ற இறுதிக் கட்ட பிரசாரம்

அவிநாசி நகரில் பாஜக வேட்பாளா் எல். முருகன் வாக்கு சேகரிப்பு

திருவண்ணாமலை பாஜக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சிவகாசி தொகுதியில் வீதி வீதியாகச் சென்று காங். வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

