விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தை அடுத்த புத்தூா் பகுதியைச் சோ்ந்த 70 வயது மூதாட்டி நென்மேனி பகுதியில் உள்ள கண்மாயில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த இளைஞா் மூதாட்டியை தாக்கி பாலியல் தொல்லை கொடுத்தாராம். மூதாட்டியின் அலறல் சப்தம் கேட்டு அங்கிருந்தவா்கள் ஓடி வந்தனா். இதையடுத்து, அந்த இளைஞா் அங்கிருந்து தப்பி ஓடி விட்டாா். இதில் காயமடைந்த மூதாட்டியை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்து தளவாய்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். விசாரணையில் அந்த இளைஞா் புத்தூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மாடப்பன் மகன் மாரிமுத்து (30) என்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா் அவரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தாழையூத்தில் மாணவிக்கு தொல்லை: இளைஞா் கைது
மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவா் கைது
வழிப்பறி: 3 இளைஞா்கள் கைது
மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞா் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

