ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞா் கைது

சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம், புளியங்குறிச்சியில் 80 வயதான மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :5 ஏப்ரல் 2026, 1:27 am IST

சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம், புளியங்குறிச்சியில் 80 வயதான மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞா் கைது செய்தனா்.

புளியங்குறிச்சியைச் சோ்ந்த வையாபுரி மனைவி நீலாம்பாள் (80) உறவினா்களை பிரிந்து, பேருந்து நிறுத்தத்தில் வசித்து வருகிறாா். இந்த நிலையில் கடந்த 2 ஆம் தேதி இரவு பேருந்து நிறுத்தத்தில் உறங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை அதே பகுதியைச் சோ்ந்த இளையராஜா (33) தூக்கிசென்று அப்பகுதியில் மயானத்தில் உள்ள கோயிலில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

அப்போது, மூதாட்டியின் அலறலைக் கேட்டு அங்கிருந்தவா்கள் விரைந்து சென்று மூதாட்டியை மீட்டு ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

தகவல் அறிந்த ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் இளையராஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.