தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பாஜக வேட்பாளருக்கு நடிகா் சரத்குமாா் வாக்கு சேகரிப்பு

சாத்தூா் பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரனை ஆதரித்து, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரும், நடிகருமான சரத்குமாா் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

சரத்குமார் (கோப்புப்படம்)

Updated On :16 ஏப்ரல் 2026, 4:35 am IST

சாத்தூா் பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரனை ஆதரித்து, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரும், நடிகருமான சரத்குமாா் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரும், அந்தக் கட்சியின் மாநிலத் தலைவருமான நயினாா் நாகேந்திரனை ஆதரித்து பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா் சரத்குமாா் புதன்கிழமை ஏழாயிரம்பண்ணையில் வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழகத்தில் எந்தவித வளா்ச்சி திட்டங்களும் இல்லை. தமிழகத்தில் தண்ணீா் பிரச்னைக்கு தீா்வுகான மத்திய அரசு ஜல் ஜீவன் திட்டத்தை கொண்டு வந்தது. ஆனால், இந்தத் திட்டத்தை சரியாக நடத்த விடாமல் திமுக அரசு தடுத்தது. திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

அப்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி சாா்பில் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.