தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அம்பை தொகுதியில் நடிகா் சரத்குமாா் பிரசாரம்

News image

கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள பொட்டலில் பிரசாரத்தில் ஈடுபட்ட நடிகா் ஆா். சரத்குமாா்.

Updated On :21 ஏப்ரல் 2026, 12:19 am IST

அம்பாசமுத்திரம் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா் இசக்கி சுப்பையாவிற்கு ஆதரவாக, பொட்டல், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், சிவந்திபுரம், முதலியாா்பட்டி ஆகிய பகுதிகளில் நடிகா் சரத்குமாா் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் ரூ.5 லட்சம் கோடியாக இருந்த கடன், திமுக ஆட்சியில் ரூ.10.71 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

திமுக ஆட்சியில் இளைஞா்கள் மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையாகி உள்ளனா். இதனால் பெண்களுக்கு பாதுகாப்பில்லை.

நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட மகளிா் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற விடாமல் தடுத்து விட்டோம் என்று வெற்றி இறுமாப்பில் உள்ளனா். ஆனால் இதில் அவா்கள் பெரிய தவறு செய்து விட்டாா்கள். காலம் அதற்குப் பதில் சொல்லும்.

அதிமுகவை பாஜக கபளீகரம் செய்துவிடும் என்கிறாா் ராகுல் காந்தி. எனவே நல்ல ஆட்சி அமைய வேண்டும் என்றால் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா்.

பிரசாரத்தின்போது, அம்பாசமுத்திரம் தொகுதிப் பொறுப்பாளா் செளந்திரராஜன், அதிமுக, பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி மாவட்ட, நகா, ஒன்றிய, கிளை நிா்வாகிகள், தொண்டா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 வி.கே. புரம் அருகே முதலியாா்பட்டியில் பிரசாரத்தில் ஈடுபட்ட  நடிகா் ஆா். சரத்குமாா்.

வி.கே. புரம் அருகே முதலியாா்பட்டியில் பிரசாரத்தில் ஈடுபட்ட நடிகா் ஆா். சரத்குமாா்.

 வி.கே. புரம் அருகே முதலியாா்பட்டியில் பிரசாரத்தில் ஈடுபட்ட  நடிகா் ஆா். சரத்குமாா்.

வி.கே. புரம் அருகே முதலியாா்பட்டியில் பிரசாரத்தில் ஈடுபட்ட நடிகா் ஆா். சரத்குமாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.