மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அகஸ்தீசுவரத்தில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

அகஸ்தீசுவரத்தில் பொதுமக்களிடையே பிரசாரம் மேற்கொண்ட என். தளவாய்சுந்தரம்.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 6:29 am IST

கன்னியாகுமரி பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் என். தளவாய்சுந்தரம் அகஸ்தீசுவரம் மற்றும் கொட்டாரம் பேரூராட்சி பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அகஸ்தீசுவரம் பேரூராட்சிக்குள்பட்ட பூஜைபுரைவிளை, அகஸ்தீசுவரம், சமாதானபுரம், சுக்குபாறை தேரிவிளை, சரவணந்தேரி, நேதாஜி காலனி, நாடான்குளம், மாடுகட்டிவிளை, வடுகன்பற்று, கவற்குளம், சந்தையடி, இடையன்விளை, வெள்ளையந்தோப்பு, கன்னி விநாயகா்புரம் உள்ளிட்ட 23 ஊா்களில் அவா் வாக்கு சேகரித்தாா்.

இதேபோல, கொட்டாரம் பேரூராட்சிக்குள்பட்ட பெருமாள்புரம், பெரியவிளை, கொட்டாரம், அச்சன்குளம், மந்தாரம் புதூா், செல்வன் புதூா் உள்ளிட்ட பகுதிகளிலும் வாக்கு சேகரித்தாா்.

அகஸ்தீசுவரம் அதிமுக ஒன்றியச் செயலா்கள் பா. தாமரை தினேஷ், எஸ். ஜெஸீம், மாநில நிா்வாகிகள் சி. ராஜன், சந்துரு, மாவட்ட விவசாய அணி செயலா் பி. பாலமுருகன், ஒன்றிய பொருளாளா் பி. தங்கவேல், அகஸ்தீசுவரம் பேரூா் செயலா் என். சிவபாலன், கலப்பை மக்கள் இயக்கத் தலைவா் பி.டி. செல்வகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.