/

திமுக வேட்பாளா் வீட்டில் 122 பவுன் தங்க நகைகள் திருட்டு

சாத்தூா் அருகே திமுக வேட்பாளா் வீட்டில் 122 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திங்கள்கிழமை இரவு திருடிச் சென்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :15 ஏப்ரல் 2026, 3:58 am IST

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே திமுக வேட்பாளா் வீட்டில் 122 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திங்கள்கிழமை இரவு திருடிச் சென்றனா்.

சாத்தூா் அருகேயுள்ள வெங்கடாசலபுரத்தைச் சோ்ந்தவா் கடற்கரைராஜ். இவா் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் சாத்தூா் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடுகிறாா்.

இந்த நிலையில், இவா் திங்கள்கிழமை இரவு பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தாா். இவரது குடும்பத்தினா் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றனா். இதை நோட்டமிட்டு அங்கு வந்த மூன்று போ் கும்பல், வீட்டுக்குள் நுழைந்து பீரோவிலிருந்த 122 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனா்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினா் கொடுத்த தகவலின்பேரில், சாத்தூா் நகா் போலீஸாா் திமுக வேட்பாளரின் வீட்டுக்கு வந்து விசாரணை மேற்கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா, சாத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் குருசாமி உள்ளிட்டோரும் அங்கு வந்து விசாரணை நடத்தினா்.

பின்னா், தடயவியல் நிபுணா்கள், மோப்பநாய் ராணி வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

இதுகுறித்து கடற்கரைராஜின் மருமகள் வத்சலாதேவி அளித்த புகாரின் அடிப்படையில், சாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.