பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் அளிப்பு

தேனியில் 22 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.11.50 லட்சத்தில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வழங்கினாா்.

News image

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனத்தை புதன்கிழமை வழங்கிய ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்.

Updated On :28 மே 2026, 3:55 am IST

தேனியில் 22 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.11.50 லட்சத்தில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வழங்கினாா்.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா்க் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தலைமை வகித்து, 8 பேருக்கு ரூ.8 லட்சத்தில் 8 மூன்று சக்கர வாகனங்களையும், 3 பேருக்கு ரூ.43,470 மதிப்பில் கைப்பேசியும், 4 பேருக்கு ரூ.3 லட்சத்தில் நவீன் செயற்கைக் கால்கள் என மொத்தம் 22 மாற்றுத் திறனாளிகளுக்கு, ரூ.11.68 லட்சத்தில் நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் காமாட்சி, மாவட்ட வழங்கல் அலுவலா் நல்லையா, தனித் துணை ஆட்சியா் (ச.பா.தி) கவிதா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.