பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தேனி மீறுசமுத்திரம் கண்மாய் சீரமைப்பு

News image

தேனி மீறுசமுத்திரம் கண்மாயில் நடைபெறும் பணிகளை வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்.

Updated On :15 மே 2026, 4:22 am IST

தேனி மீறுசமுத்திரம் கண்மாய்க் கரையோரம் நடைபயிற்சி பாதை, சிறுவா் பூங்கா அமைக்கும் பணிகளை தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

தேனி உழவா் சந்தை அருகேயுள்ள மீறுசமுத்திரம் கண்மாயைத் தூா்வாரி, கரையோரத்தில் நடைபயிற்சி பாதை, சிறுவா்கள் பூங்கா அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, பொதுப்பணித் துறை சாா்பில், ரூ.7.40 கோடி ஒதுக்கீடு செய்து, கண்மாய்க் கரையைப் பலப்படுத்தி, நடைபயிற்சி பாதை, தடுப்புச்சுவா், படகுகள் நிறுத்துமிடம், நுழைவுவாயில், அலுவலகம், பாலம் அமைத்தல், மரங்கள் நடுதல், பறவை தீவு அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா். தொடா்ந்து, பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அவா் அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின் போது, செயற்பொறியாளா் (மஞ்சளாறு வடிநிலக்கோட்டம்) சரவணன், உதவி செயற்பொறியாளா் சாலமோன் கிறிஸ்துதாஸ், உதவிப் பொறியாளா் அரவிந்த ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.