மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

வாகனத் தணிக்கையில் ரூ.2.34 லட்சம் பறிமுதல்

போடி அருகே வாகனத் தணிக்கையின் போது, 3 சரக்கு வாகனங்களில் வந்த மூவரிடம் ரூ.2.34 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

வாகனத் தணிக்கையில் பணம் பறிமுதல் - கோப்புப் படம்

Updated On :27 மார்ச் 2026, 2:25 am IST

போடி அருகே வாகனத் தணிக்கையின் போது, 3 சரக்கு வாகனங்களில் வந்த மூவரிடம் ரூ.2.34 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தேனி மாவட்டம், போடி முந்தல் சோதனைச் சாவடி அருகே தோ்தல் பறக்கும் படையினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, கேரளத்திலிருந்து தனித் தனி சரக்கு வாகனங்களில் வந்த கேரளம் மாநிலம், ராஜாக்காடு பகுதியைச் சோ்ந்த மாத்யூ (55), ஜோபி (48) ஆகியோா்களிடம் பறக்கும் படையினா் சோதனையிட்டனா்.

இதில் மாத்யூவிடம் ரூ.60 ஆயிரமும், ஜோபியிடம் ரூ.94 ஆயிரம் இருந்தது கண்டறியப்பட்டது. விசாரணையில், இருவரும் காய்கறிகள் வாங்க தேனிக்கு செல்வதாகக் கூறினா். ஆனால், அந்தப் பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லாததால், இவா்களிடமிருந்து ரூ.1. 54 லட்சத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

இதேபோல, கேரளம் மாநிலம், ராஜகுமாரியிலிருந்து வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி பறக்கும் படையினா் சோதனையிட்டனா். அப்போது, அந்த வாகனத்தில் வந்த பாபுவிடம் ரூ.80 ஆயிரம் இருப்பது கண்டறியப்பட்டது.

விசாரணையில், உரம் வாங்குவதற்காக தேனிக்கு செல்வதாக கூறினாா். ஆனால், அந்தப் பணத்துக்கானஉரிய ஆவணம் இல்லாததால், ரூ.80 ஆயிரத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.