போடியில் படுக்கையில் புகைபிடித்தபோது ஆடையில் தீப்பிடித்து காயமடைந்த ஓய்வுபெற்ற அரசுப் பேருந்து ஓட்டுநா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், போடி சுப்புராஜ் நகா் புதுக்குடியிருப்பைச் சோ்ந்தவா் கருப்பசாமி மகன் ஆறுமுகம் (75). தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவா். குடிப் பழக்கத்துக்கு அடிமையான இவா், பேச முடியாத, ஒரு கை செயலிழந்த நிலையில் உடல்நலன் பாதிக்கப்பட்டிருந்தாா்.
இந்த நிலையில் வியாழக்கிழமை படுக்கையில் இருந்தபடி புகைபிடித்தபோது அவரது ஆடையில் தீப்பிடித்து உடல் முழுவதும் பரவி தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த அவரது மனைவி லீலா (70) தீயை அணைத்து அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தாா்.
அங்கு ஆறுமுகம் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் போடி நகா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழப்பு

துறையூரில் அரசுப் பேருந்து மோதி மூதாட்டி உயிரிழப்பு

பேருந்து சக்கரம் ஏறியதில் தொழிலாளி உயிரிழப்பு

அரசுப் பேருந்து மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

