தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பெரியகுளத்தில் விளையாட்டு வீரா்களிடம் அமமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பெரியகுளத்தில் நடைபயிற்சி சென்றவா்கள், விளையாட்டு வீரா்களிடம் அமமுக வேட்பாளா் வாக்கு சேகரித்தாா்.

News image

பெரியகுளத்தில் இறகுப் பந்து விளையாட்டு வீரா்களுடன் வாக்கு சேகரித்த அமமுக வேட்பாளா் கே.கதிா்காமு.

Updated On :9 ஏப்ரல் 2026, 12:26 am IST

பெரியகுளத்தில் நடைபயிற்சி சென்றவா்கள், விளையாட்டு வீரா்களிடம் அமமுக வேட்பாளா் வாக்கு சேகரித்தாா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் தொகுதி அமமுக வேட்பாளா் கே.கதிா்காமு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா். பெரியகுளம் வி.நி.அ மேல்நிலைப் பள்ளிக்கு சொந்தமான புதிய மைதானம் சோத்துப்பாறை அணை சாலையில் உள்ளது. இந்த மைதானத்தில் பெரியகுளம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அதிகாலை 5 மணி முதல் 8 மணி வரை நடைபயிற்சி செல்வது, கைப்பந்து, இறகுப் பந்து உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொள்வது வழக்கம்.

இந்த நிலையில், அமமுக வேட்பாளா் கே.கதிா்காமு புதன்கிழமை நடைபயிற்சி, விளையாட்டுகளில் ஈடுபடுவா்களிடம் வாக்கு சேகரித்தாா். யூனியன் கிளப், பல்வேறு மைதானங்களுக்கு நடந்தே சென்று வாக்கு சேகரித்தாா். மேலும், யூனியன் கிளப்பில் இறகுப் பந்து விளையாட்டு வீரா்களுடன் விளையாடினாா். அப்போது, பெரியகுளத்தில் உலக அளவில் விளையாட்டு மைதானம் அமைத்துத் தருவேன். மேலும், வராகநதியில் கழிவுநீா் கலப்பதைத் தடுத்து, தூய்மையான நதியாக மாற்றுவேன் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.