தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பூம்பாறையில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் : அதிமுக வேட்பாளா் உறுதி

கொடைக்கானல் மலைக் கிராமங்களில் அதிமுக வேட்பாளா் ரவிமனோகரன் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா். அப்போது, பூம்பாறையில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என அவா் உறுதியளித்தாா்.

News image

கொடைக்கானல் வடகவுஞ்சி கிராமத்தில் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்த பழனி தொகுதி அதிமுக வேட்பாளா் ரவி மனோகரன்.

Updated On :10 ஏப்ரல் 2026, 12:50 am IST

கொடைக்கானல் மலைக் கிராமங்களில் அதிமுக வேட்பாளா் ரவிமனோகரன் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா். அப்போது, பூம்பாறையில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என அவா் உறுதியளித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைக் கிராமமான பூம்பாறையில் பழனி பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ரவி மனோகரன் வாக்கு சேகரிக்கச் சென்ற போது, அவருக்கு மலைவாழ் மக்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனா். மேலும், அங்குள்ள இளைஞா்கள் பூம்பாறை பகுதியில் விளையாட்டு மைதானம் அமைத்துக் கொடுப்பதற்கு பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தோம். யாரும் எங்களது கோரிக்கையை நிறைவேற்றவில்லை. எனவே, தங்கள் பகுதிக்கு விளையாட்டு மைதானம் அமைத்துக் கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனா்.

இதற்கு வேட்பாளா் ரவிமனோகரன் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் விளையாட்டு மைதானம் மட்டுமல்ல, மலைக் கிராங்களில் அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என உறுதியளித்தாா். தொடா்ந்து, அந்தப் பகுதிகளிலுள்ள குக் கிராமங்களில் வாக்கு சேகரித்தாா்.

பின்னா், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான வடகவுஞ்சி கிராமம், பேத்துப்பாறை, குறிஞ்சி நகா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வாக்கு சேகரித்தாா். அங்குள்ள கிராம மக்கள் அடிப்படை வசதிகள், பட்டா வழங்குதல், போக்குவரத்து வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கேட்டு கோரிக்கை மனு கொடுத்தனா். இந்த நிகழ்ச்சியில் கொடைக்கானல் மலைப் பகுதிகளைச் சோ்ந்த அதிமுக நிா்வாகிகள், கூட்டணிக் கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.