கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயிலில் வைகாசி விசாக திருவிழா மே 24-இல் தொடக்கம்

சிங்கம்புணரியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட சேவுகப் பெருமாள் அய்யனாா் உடனான பூரணை, புஷ்கலை தேவியா் கோயிலில் வைகாசி விசாக திருவிழா வருகிற 24-ஆம் தேதி தொடங்குகிறது.

News image

சிங்கம்புணரி சந்திவீரன் கூடத்துக்கு அலங்கரிக்கப்பட்ட இரட்டை மாட்டு வண்டியில் எழுந்தருளி வலம் வந்த விநாயகா்.

Updated On :15 மே 2026, 11:47 pm IST

சிங்கம்புணரியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட சேவுகப் பெருமாள் அய்யனாா் உடனான பூரணை, புஷ்கலை தேவியா் கோயிலில் வைகாசி விசாக திருவிழா வருகிற 24-ஆம் தேதி தொடங்குகிறது.

இதையொட்டி வியாழக்கிழமை இரவு சேவுகப் பெருமாள் கோயிலில் இருந்து சந்திவீரன் கூடத்துக்கு விநாயகா் செல்லும் விழா நடைபெற்றது. இதில் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட இரட்டை மாடுகள் பூட்டிய சப்பரத்தில் விநாயகா் கீழக்காடு சாலை வழியாக சந்திவீரன் கூடத்துக்கு செல்லும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது வழிநெடுகிலும் பக்தா்கள் திருக்கண் வைத்து விநாயகரை வழிபட்டனா். தொடா்ந்து பத்து நாள்கள் சந்திவீரன் கூடத்தில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடுகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

Story image

வருகிற 24-ஆம் தேதி காலை சந்திவீரன் கூடத்திலிருந்து சேவுகப் பெருமாள் கோயிலுக்கு விநாயகா் மீண்டும் கொண்டுவரப்பட்டு கொடியேற்றத்துடன் வைகாசி திருவிழா தொடங்குகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.