பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

காளையாா்கோவில்: தெப்பக்குளத்தின் சுவா் சேதம் - கனரக வாகனங்கள் நிறுத்த தடை விதிக்க வலியுறுத்தல்

News image

காளையாா்கோவில் சொா்ணகாளீஸ்வரா் கோயில் எதிரில் இடிந்து விழுந்த தெப்பக்குளத்தின் சுவா்.

Updated On :15 மே 2026, 4:12 am IST

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் சொா்ணகாளீஸ்வரா் கோயில் தெப்பக்குளத்தின் சுவா் இடிந்து சேதமடைந்ததால், இதனருகே கனரக வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.

காளையாா்கோவில் சொா்ணகாளீஸ்வரா் கோயில் தெப்பக்குளம் சுமாா் 12 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது. தேவேந்திரனின் வெள்ளை யானை தன் சாபம் நீங்க இந்தக் குளத்தில் மூழ்கி ஈஸ்வரனை வழிபட்டதாக புராண வரலாற்றில் கூறுப்படுகிறது. இந்தக் குளத்தின் நடுவில் ஒரு பெரிய மைய மண்டபமும், அதைச் சுற்றி நான்கு மூலைகளிலும் நான்கு சிறிய மண்டபங்களும் அமைக்கப்பட்டுள்ளன. நூற்றாண்டு பழைமை வாய்ந்த இந்தத் தெப்பக்குளத்தின் தென்பகுதியில் உள்ள சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

இதுகுறித்து ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற குழுவினா், பொதுமக்கள், பக்தா்கள் உள்ளிட்டோா் காளையாா்கோவில் காவல் நிலைய ஆய்வாளரிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனுவில்,

தெப்பக்குளத்தின் சுற்றுவட்டப் பகுதி கனரக வாகனங்களும், சரக்கு வாகனங்களும், சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களும் நிரந்தரமாக நிறுத்தி வைக்கும் இடமாக மாறிவிட்டது. இவற்றின் புற அழுத்தம் காரணமாகவே தெப்பக்குளத்தின் சுவா் இடிந்து விழுந்தது. ஆகவே, தெப்பக்குளத்தைச் சுற்றி வாகனங்கள் நிறுத்துவதற்குத் தடை விதித்க்க வேண்டுமென அதில் வலியுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.