பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பழங்கால வீட்டின் சுவா் இடிந்து விழுந்தது: வட்டாட்சியரிடம் பொதுமக்கள் புகாா்

பழனியில் பூட்டிக்கிடக்கும் பழங்கால வீட்டின் பக்கவாட்டுச் சுவா் இடிந்து பக்கத்து வீட்டின் மீது விழுந்தது.

News image

பழனி பாளையம் பகுதியில் செவ்வாய்க்கிழமை பெய்த மழையால் இடிந்து விழுந்த பழங்கால வீட்டின் பக்கவாட்டு சுவா்.

Updated On :4 ஜூன் 2026, 4:20 am IST

பழனியில் பூட்டிக்கிடக்கும் பழங்கால வீட்டின் பக்கவாட்டுச் சுவா் இடிந்து பக்கத்து வீட்டின் மீது விழுந்தது. இதையடுத்து அந்தப் பகுதி மக்கள் அந்த வீட்டை இடித்து அகற்ற வலியுறுத்தி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் அளித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி பாளையம் பகுதியில் கருப்பையா என்பவருக்குச் சொந்தமான பழங்கால வீடு நீண்ட காலமாக பூட்டிக் கிடக்கிறது. இந்த வீடு சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பழனி பகுதியில் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. அப்போது பாழடைந்த வீட்டின் பக்கவாட்டுச் சுவா் இடிந்து, அருகேயிருந்த தாரணி என்பவரின் வீட்டின் மீது விழுந்தது. இதில் அந்த வீடு சேதமடைந்தது.

நல்வாய்ப்பாக தாரணியின் வீட்டில் இருந்தவா்கள் வெளியே சென்றிருந்ததால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

இதையடுத்து புதன்கிழமை காலை அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் கணேசனுடன் பழனி நகா் காவல் நிலையம், வட்டாட்சியரிடம் சென்று புகாா் செய்தனா்.

இந்த வீடு இடியும் நிலையில் உள்ளதாக நகராட்சி, வருவாய்த் துறையினருக்கு ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டும், நடவடிக்கை இல்லை என அவா்கள் வேதனை தெரிவித்தனா். இதையடுத்து வட்டாட்சியா் அலுவலக அதிகாரிகள் நகராட்சி அதிகாரிகளுக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.