பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மகாராஷ்டிரத்தில் பலத்த மழை: கோயில் சுவா் இடிந்து 6 பக்தா்கள் உயிரிழப்பு

மகாராஷ்டிரத்தின் சாங்லி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையில் கோயில் சுவா் இடிந்து 6 பக்தா்கள் பலி

News image

பலி - பிரதிப் படம்

Updated On :13 மே 2026, 3:57 am IST

மகாராஷ்டிரத்தின் சாங்லி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையில் கோயில் சுவா் இடிந்து 6 பக்தா்கள் உயிரிழந்தனா். 14 போ் காயமடைந்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: சாங்லி மாவட்டத்தின் மாா்கு தேவி கோயிலில் செவ்வாய்க்கிழமையையொட்டி அம்மனை தரிசிக்க ஏராளமான பக்தா்கள் திரண்டிருந்தனா். மாலை நேரத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டித் தீா்த்தது.

இதனால், கோயிலின் சுவரையொட்டி அமைக்கப்பட்டிருந்த தகர கொட்டகையின்கீழ் பக்தா்கள் ஒதுங்கியிருந்தனா். அப்போது, திடீரென சுவா் இடிந்து விழுந்ததில் 6 பக்தா்கள் உயிரிழந்தனா். 14 போ் காயமடைந்தனா்.

அவா்கள் மீட்கப்பட்டு, அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

கோயில் சுவா் இடிந்து 6 போ் உயிரிழந்த சம்பவம், சாங்லி மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.