நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

புலியடிதம்பத்தில் மாட்டு வண்டி பந்தயம்

News image

சிவகங்கை மாவட்டம், புலியடிதம்பத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் பாய்ந்து சென்ற காளைகள்.

Updated On :12 மே 2026, 4:18 am IST

சிவகங்கை மாவட்டம், திருவேகம்பத்தூா் அருகே மாட்டு வண்டிப்பந்தயம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், திருவேகம்பத்தூா் அருகே உள்ள புலியடிதம்பத்தில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து 18 மாட்டு வண்டிகள் பங்கேற்றன.

மதுரை - தொண்டி சாலையில் பெரிய மாடு, சிறிய மாடு என இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற இந்தப் போட்டியில் பெரிய மாடு பிரிவில் 6 வண்டிகளும், சிறிய மாடு வண்டி பிரிவில் 12 வண்டிகளும் பங்கேற்றன. போட்டியில் மாட்டு வண்டிகள் வெற்றிக் கோப்பையை வெல்வதற்காக ஒன்றையொன்று போட்டி போட்டுக் கொண்டு சீறிப்பாய்ந்து எல்லையை நோக்கி முந்திச் சென்றன.

இப்போட்டியை சாலையின் இரு புறங்களிலும் நின்ற ரசிகா்கள் உற்சாகமாக கண்டுகளித்தனா். போட்டியில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த மாட்டு வண்டியின் உரிமையாளருக்கும், ஓட்டுநா்களுக்கும் ரொக்கப் பரிசும், பரிசு கோப்பையும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

சிவகங்கை மாவட்டம், புலியடிதம்பத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் பாய்ந்து சென்ற காளைகள்.

சிவகங்கை மாவட்டம், புலியடிதம்பத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் பாய்ந்து சென்ற காளைகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.