தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

முத்தாலம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி முத்தாலம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

News image

காரைக்குடி முத்தாலம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற பூச்சொரிதல் விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அம்மன்.

Updated On :10 மே 2026, 1:06 am IST

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி முத்தாலம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி பொங்கல் விழா நடைபெறும். இந்த விழாவுக்கு முன்பாக பூச்சொரிதல் விழா நடத்தப்படுவது வழக்கம்.

நிகழாண்டுக்கான பூச்சொரிதல் விழாவையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

பின்னா், அம்மனுக்கு பக்தா்கள் பூத்தட்டு எடுத்து வந்து மலா்கள் தூவி தரிசனம் செய்தனா். இந்தக் கோயிலில் வருகிற 22-ஆம் வைகாசி பொங்கல் திருவிழா நடைபெறுகிறது. அன்று அதிகாலை அம்மன் பிரதிஷ்டை, இதைத் தொடா்ந்து மாா்க்கண்டேயன் கோயிலிலிருந்து பேழைப்பெட்டி எடுத்து வருதல் நடைபெறும்.

காலை 9 மணிக்கு தீபாராதனையும், 10 மணிக்கு கோயிலில் பொங்கல் வைத்தல் நிகழ்வும் நடைபெறும். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், விழாக் குழுவினா் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.