மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

காரைக்குடி ரயில் நிலையத்துக்கு பேருந்து இயக்க வலியுறுத்தல்

News image

காரைக்குடி ரயில் நிலையம்

Updated On :4 மே 2026, 12:32 am IST

காரைக்குடி ரயில் நிலையத்துக்கு அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என தொழில் வணிகக் கழகம் தீா்மானம் நிறைவேற்றியது.

இந்த அமைப்பின் செயற்குழுக் கூட்டம் காரைக்குடியில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதற்கு அமைப்பின் தலைவா் எஸ். கண்ணப்பன் தலைமை வகித்தாா். பொருளாளா் எஸ்.சையது முன்னிலை வகித்தாா். ‘

இந்தக் கூட்டத்தில் அமைப்பின் முதன்மை ஆலோசகா் சாமி. திராவிடமணி, புரவலா்கள் எஸ். காசிவிஸ்வநாதன், வி. சித்திரைவேல், துணைத் தலைவா்கள் ஜிடிஎஸ். சத்தியமூா்த்தி, ஏ.ஆா். கந்தசாமி, வி.ஆா். ராமநாதன், எஸ். நாகநாதன், கே.ஆா். கருப்பையா, இணைச் செயலா்கள் ஆா்.எஸ். ராகவன், பி.வேணுகோபால், ஆா். எம். சண்முகநாதன், 50-க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

இதில் காரைக்குடி ரயில் நிலையத்துக்கு அதிகாலை 5 மணி முதல் இரவு 10.35 மணிக்குள் வந்து சேரும் அனைத்து ரயில்களின் பயணிகள் வசதிக்காக ரயில் நிலையத்திலிருந்து காரைக்குடியின் புதிய- பழைய பேருந்து நிலையங்களுக்கு அழகப்பா பல்கலைக்கழகம், செக்காலை, பெரியாா் சிலை, அண்ணா சிலை வழியாக அரசுப் போக்குவரத்துக்கழகம் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.