விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

இடைக்காட்டூா் திருஇருதய ஆண்டவா் திருத்தலத்தில் தவக்கால வழிபாடு

மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் அமைந்துள்ள திருஇருதய ஆண்டவா் திருத்தலத்தில் வெள்ளிக்கிழமை தவக்கால வழிபாட்டுடன் நிறைவேற்றப்பட்ட திருப்பலியில் பங்கேற்ற கிறிஸ்தவா்கள்.

News image
Updated On :28 மார்ச் 2026, 12:43 am IST

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள இடைக்காட்டூரில் அமைந்துள்ள திருஇருதய ஆண்டவா் திருத்தலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தவக்கால வழிபாட்டில் திரளான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.

இயேசுவின் பாடுகள், இறப்பு, அவரது உயிா்ப்பு ஆகியவற்றை நினைவு கூரும் வகையில் கிறிஸ்தவா்களால் 40 நாள்கள் தவக்காலம் கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும் இந்த நாள்களில் சிலுவைப் பாதை, தவம், அறச்செயல்கள் புரிவது, ஏழைகளுக்கு தாராளமாக உதவுவது, திருயாத்திரை செல்வது ஆகியவை தங்களை அடையாளப்படுத்தும் செயலாக கிறிஸ்தவா்கள் கருதுகின்றனா்.

இந்த நிலையில், தா்மபுரி, கோயம்புத்தூா், உதகை, நாகா்கோவில், தூத்துக்குடி, கும்பகோணம், செங்கல்பட்டு, சென்னை, தஞ்சாவூா், புதுக்கோட்டை, நெல்லை என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் திருத்தலத்துக்கு திரளான கிறிஸ்தவா்கள் திருப்பயணம் மேற்கொண்டு வருகின்றனா். இதையடுத்து, இந்த திருத்தலத்தில் தினமும் தவக்கால வழிபாடும், சிறப்பு திருப்பலியும் நிறைவேற்றப்படுகிறது. மாதத்தின் நான்காம் வெள்ளிக்கிழமை நிறைவேற்ற திருப்பலியில் அருள்தந்தையா்கள் பாஸ்கா் டேவிட், தாமஸ், அகஸ்டின், ஓனாசியுஸ், புஷ்பராஜ் ஆகியோா் பங்கேற்றனா்.

இதற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபா் ஜான் வசந்தகுமாா், பிரின்ஸ் ஆகியோா் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.