ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வாக்களிப்பதன் அவசியம் குறித்து தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து திருப்பத்தூரில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

News image

திருப்பத்தூரில் வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தலைமையில் உறுதிமொழி எடுத்துக் கொண்ட கல்லூரி மாணவிகள்.

Updated On :27 மார்ச் 2026, 12:39 am IST

நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து திருப்பத்தூரில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தலைமை வகித்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே மாற்றுத் திறனாளிகளின் வாகன விழிப்புணா்வுப் பேரணியை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து அண்ணா சிலை அருகே நேஷனல் அகாதெமி கல்லூரி மாணவிகளின் ‘என் வாக்கு என் உரிமை’ என்ற தலைப்பில் வரைந்த கோலத்தை ஆட்சியா் பாா்வையிட்டாா். இதைத்தொடா்ந்து பேருந்து நிலையத்தில் நூறு சதவீதம் நோ்மையாக வாக்களிப்போம் என வாக்காளா் விழிப்புணா்வு மணிக்கூண்டில் மணியடித்து கையொப்பமிட்டாா். பின்னா் பொதுமக்கள், பயணிகள், ஓட்டுநா்கள், நடத்துநா்கள் தங்கள் கையொப்பத்தை பதிவு செய்தனா்.

இதில் திருப்பத்தூா் தோ்தல் அலுவலா் சிவபாலன், வட்டாட்சியா்கள் திருப்பத்தூா் மாணிக்கவாசகம், சிங்கம்புணரி நாகநாதன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் பாஸ்கரன், நேஷனல் சமுதாயக் கல்லூரி முதல்வா் சுரேஷ்பிரபாகா், வருவாய் ஆய்வாளா் கீதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மானாமதுரை: மானாமதுரையில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தப் பேரணியை மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் அலுவலா் ராஜா சிங், உதவித் தோ்தல் அலுவலரும், வட்டாட்சியருமான கிருஷ்ணகுமாா் ஆகியோா் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனா். இதில் மானாமதுரை அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் திரளானோா் கலந்து கொண்டனா். இந்தப் பேரணி அண்ணா சிலை அருகே நிறைவடைந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.