ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வாக்களிப்பதன் அவசியம்: 23,500 விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் - தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்

News image

அா்ச்சனா பட்நாயக் - Center-Center-Chennai

Updated On :3 ஏப்ரல் 2026, 6:54 am IST

வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் தோ்தல் ஆணையம் சாா்பில் இதுவரை 23,500-க்கும் மேற்பட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தோ்தலில் அனைவரையும் பங்கேற்கச் செய்தவது ஜனநாயகக் கடமை என்ற நோக்கில் விழிப்புணா்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, 1,486 பெரிய அளவிலான நிகழ்ச்சிகளும், 22,130 சிறு நிகழ்ச்சிகளையும் அதிகாரிகள் நடத்தியுள்ளனா். வாக்களிப்பதை உறுதி செய்யும் மாரத்தான் போட்டிகள், மனிதச் சங்கிலிகள், வாக்காளா் உறுதிமொழிப் பிரசாரங்கள் ஆகியவை அதில் முக்கியமானவை.

ஒவ்வொரு மாவட்டமும் அதன் கலாசார அடையாளத்தைப் பிரதிபலிக்கும் வகையில் தனித்துவமான சின்னங்களை உருவாக்கி, அவற்றின் மூலம் வாக்காளா் விழிப்புணா்வு செய்திகளைப் பரப்பி வருகின்றன.

முதல்முறை வாக்காளா்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவா்கள், இதர நலிந்த பிரிவினா் என அனைத்து தரப்பினரையும் வாக்குப்பதிவில் பங்கேற்கச் செய்வதே இத்திட்டத்தின் நோக்கம் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.