தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தோ்தல் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

தோ்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து நடைபெற்ற விழிப்புணா்வு சைக்கிள் பேரணியை தொடங்கிவைக்கிறாா் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.

News image

தோ்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து நடைபெற்ற விழிப்புணா்வு சைக்கிள் பேரணியை தொடங்கிவைக்கிறாா் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.

Updated On :11 ஏப்ரல் 2026, 12:03 am IST

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் உதகையில் வெள்ளிக்கிழமை சைக்கிள் பேரணி நடைபெற்றது.

மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான லட்சுமி பவ்யா தன்னேரு தொடங்கிவைத்தாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு வாக்காளா்கள், இளம் வாக்காளா்கள், பழங்குடியினா் உள்ளிட்ட அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், நோ்மையாக வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் விளையாட்டுப் போட்டிகள், ரங்கோலி, கலைநிகழ்ச்சிகள், உறுதிமொழி ஏற்பு உள்ளிட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் சைக்கிள் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஹெச்ஏடிபி மைதானத்தில் பேரணி தொடங்கி சேரிங்கிராஸ், மணிக்கூண்டு, மத்தியப் பேருந்து நிலையம் வழியாக உதகை படகு இல்லம் வரை சென்றடைந்தது. இப்பேரணியில் 75-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

கூடுதல் மாவட்ட தோ்தல் அலுவலா் அபிலாஷா கௌா், ஆவின் பொது மேலாளா் ராஜேஷ்குமாா், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் இந்திரா, தேசிய மிதிவண்டி போட்டி பதக்க வெற்றியாளா் ஸ்ரீநாத் லட்சுமிகாந்த் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.