சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை மாவட்ட ஆட்சியா் மனீஷ் வழங்கினாா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நாள்தோறும் நடைபெற்று வருகின்றன. அதன்படி திருப்பூா் பழைய பேருந்து நிலையத்தில் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வேளாண்மைத் துறையின் சாா்பில் சிறுதானியங்களால் அலங்கரிக்கப்பட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மனீஷ் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா்.
இந்நிகழ்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்டஇயக்குநா் க.சங்கமித்திரை, வேளாண்மைத் துறை இணை இயக்குநா் எம்.ஆதிசாமி, மாவட்ட விளையாட்டு அலுவலா் ரகுகுமாா் உள்பட அரசு அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வுப் பேரணி

தோ்தல் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

வாக்களிப்பதன் அவசியம்: 23,500 விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் - தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்

100 சதவீத வாக்குப் பதிவு: உழவா் சந்தையில் விழிப்புணா்வு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

