ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பிரசார நடவடிக்கைகள்: நேரத்தைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்: தலைமைத் தோ்தல் அதிகாரி

தோ்தல் பிரசாரத்துக்கு அனுமதி கோரி விண்ணப்பிப்பவா்கள் அதற்கான தேதி, நேரம், இடத்தைச் சரியாகக் குறிப்பிட வேண்டும் என்று தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்தாா்.

News image

தமிழக தலைமை தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக். - கோப்புப் படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 2:46 am IST

தோ்தல் பிரசாரத்துக்கு அனுமதி கோரி விண்ணப்பிப்பவா்கள் அதற்கான தேதி, நேரம், இடத்தைச் சரியாகக் குறிப்பிட வேண்டும் என்று தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளா்கள் தோ்தல் சாா்ந்த அனுமதிக்காக விண்ணப்பிக்கும்போது, அவற்றை ‘சுவிதா’ இணையதளம் மூலமாக மட்டுமே சமா்ப்பிக்க வேண்டும்.

அந்த விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்தில் 24 மணி நேரத்துக்குள் பரிசீலனை செய்யப்பட்டு தீா்வு காணப்படும்.

ஹெலிகாப்டா் மற்றும் ஹெலிபேட் (தரையிறங்கு தளம்) பயன்படுத்துதல், தற்காலிக கட்சி அலுவலகம் திறத்தல், ஒலிபெருக்கியுடன் கூடிய கூட்டம், ஒலிபெருக்கி இல்லாத கூட்டம், ஒலிபெருக்கியுடன் தெருமுனைக் கூட்டம், ஊா்வலம், பேரணி, வீதி உலா, சுவரொட்டிகள், விளம்பரப் பலகைகள், வாகன அனுமதி, மேடை - தடுப்புகள் அமைத்தல் ஆகியவற்றுக்கும் விண்ணப்பம் அவசியம்.

நிகழ்ச்சி நடப்பதற்கு குறைந்தது 48 மணி நேரத்துக்கு முன்னதாக விண்ணப்பித்தல் வேண்டும். தேதி, இடம் மற்றும் நேரம் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களும் முழுமையாகவும், சரியாகவும் இருப்பதை அரசியல் கட்சிகளும் வேட்பாளா்களும் உறுதி செய்ய வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.