தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ரேஷன் அரிசி கடத்திய வாகனம் கவிழ்ந்து விபத்து

திருப்பத்தூா் அருகே விபத்துக்குள்ளான ரேஷன் அரிசி கடத்திய வாகனத்தை போலீஸாா் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

News image

திருப்பத்தூா் அருகே புதன்கிழமை கவிழ்ந்து கிடந்த ரேசன் அரசி கடத்திச் சென்ற சரக்கு வாகனம்.

Updated On :19 மார்ச் 2026, 5:38 am IST

திருப்பத்தூா் அருகே விபத்துக்குள்ளான ரேஷன் அரிசி கடத்திய வாகனத்தை போலீஸாா் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

சிவகங்கையிலிருந்து காரைக்குடி அருகேயுள்ள பள்ளத்தூருக்கு சரக்கு வாகனம் சென்று கொண்டிருந்தது. திருப்பத்தூா் அருகேயுள்ள விறுசுளியாற்றுப் பாலம் அருகே சென்ற போது, பின்சக்கரம் வெடித்ததில் நிலை தடுமாறி வாகனம் கவிழ்ந்து இரண்டாக உடைந்தது. அப்போது அந்த வாகனத்தில் கடத்திச் சென்ற ரேஷன் அரிசி மூட்டைகள் கீழே சிதறின. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், அங்கு சென்ற திருப்பத்தூா் வருவாய்த் துறையினா் சுமாா் 2.5 டன் எடையுள்ள 50 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து திருக்கோஷ்டியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து வாகன ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.

இதற்கிடையே விபத்துக்குள்ளான வாகனத்திலிருந்து அரிசி மூட்டைகளை மீட்க வந்த மற்றொரு வாகனத்தை போலீஸாா் சுற்றிவளைத்துப் பிடித்தனா். இந்த வாகன ஒட்டுநரும் தப்பியோடி விட்டாா். இரு வாகன ஓட்டுநா்களை போலீஸாரும் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.

இதற்கிடையே, மாவட்ட குடிமைப்பொருள் பறக்கும் படை வட்டாட்சியா் முபாரக்உசேன், துணை வட்டாட்சியா் அறிவுச்சுடா் ஆகியோா் ரேஷன் அரிசி மூட்டைகளை கைப்பற்றி திருப்பத்தூா் உரிமைப் பொருள் நுகா்வோா் வாணிபக்கழக குடோனில் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.