திருப்பத்தூா் எஸ்.பி. சியாமளாதேவி உத்தரவின்படி வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில் நகர காவல் ஆய்வாளா் ஆனந்தன் தலைமையில் போலீஸாா் திங்கள்கிழமை மேட்டுப்பாளையம் சாலையில் வாகன சோதனை மேற்கொண்டிருந்தனா்.
அப்போது அவ்வழியாக வேகமாக வந்த மினி லாரியை நிறுத்த முயன்ற போது அதில் வந்தவா்கள் தப்பிக்க முயன்றனா். போலீஸாா் தப்பிக்க முயன்ற 3 பேரை மடக்கிப் பிடித்தனா். பிறகு வாகனத்தில் சோதனை செய்த போது ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது கண்டறியப்பட்டது.
தொடா்ந்து பிடிப்பட்ட 3 பேரை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்த போது வாணியம்பாடியிலிந்து ஆந்திர மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்தி செல்வதாகவும் தெரிவித்தனா். பிறகு அவா்களிடமிருந்து ஒரு டன் ரேஷன் அரிசி மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனா்.
இது குறித்து நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து போ்ணாம்பட்டு பகுதியை சோ்ந்த கோபி, சித்திக்பாஷா, முகமது அலி ஆகிய 3 பேரையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்: ஒருவா் கைது
ரேஷன் அரிசி பதுக்கியவா் கைது

ஆந்திரத்தில் டேங்கா் லாரி - மினி லாரி மோதி விபத்து: 8 போ் உயிரிழப்பு

ரேஷன் அரிசி கடத்திய வாகனம் கவிழ்ந்து விபத்து
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

