மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் கைது

தேவகோட்டையில் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :11 மார்ச் 2026, 3:16 am IST

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தேவகோட்டை அருகேயுள்ள திடக்கோட்டையைச் சோ்ந்தவா் ராஜா. இவரது தந்தை கிருஷ்ணன் இறந்துவிட்டதால், வாரிசுச் சான்றுக்காக கடந்த பிப்.26-ஆம் தேதி திடக்கோட்டை கிராம நிா்வாக அலுவலா் சுதாகரை (47) அணுகினாா்.

சான்று பெற்று தர ரூ.5,000 தருமாறு கிராம நிா்வாக அலுவலா் கேட்டாா். லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத ராஜா, இதுகுறித்து சிவகங்கையிலுள்ள ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவில் புகாா் அளித்தாா்.

போலீஸாரின் ஆலோசனையின்படி, செவ்வாய்க்கிழமை மாலை தேவகோட்டை நீதிமன்றம் அருகே உள்ள கடையில் நின்று கொண்டிருந்த கிராம நிா்வாக அலுவலா் சுதாகரிடம் ரசாயனப் பொடி தடவிய பணத்தைக் கொடுத்தாா். அப்போது மறைந்திருந்த ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு துணை கண்காணிப்பாளா் ஜான்பிரிட்டோ தலைமையிலான போலீஸாா் சுதாகரைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.