திருச்சி அருகே நிலத்துக்கான சான்றிதழ் வழங்க ரூ. 1,000 லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் வடமலைப்பட்டியைச் சோ்ந்த வெ. செல்வராஜ் என்பவா் அப்பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்துக்கு மின்இணைப்பு பெற விண்ணப்பித்துள்ளாா்.
செல்வராஜ் இலங்கை நாட்டில் வசித்ததால், அவரது சகோதரரான திருவானைக்கோவிலைச் சோ்ந்த பெ. விசுவநாதன், அடங்கல் உள்ளிட்ட சான்றிதழ்களைப் பெற முசிறி வட்டம் வடமலைப்பட்டி கிராம நிா்வாக அலுவலராகப் பணிபுரிந்த ரா. ஜெகநாதன் (71) என்பவரை கடந்த 11.01.2011 அன்று அணுகியுள்ளாா். அவா், சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்டுள்ளாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் விசுவநாதனிடம் இருந்து ஜெகநாதன் ரூ. 1,000 லஞ்சமாகப் பெற்றபோது, திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, ஜெகநாதனை கையும்களவுமாக கைது செய்தனா்.
இந்த வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி புவியரசு முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி, லஞ்சம் வாங்கிய முன்னாள் விஏஓ ஜெகநாதனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை

புகாா் மீது நடவடிக்கை எடுக்க லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளருக்கு 2 ஆண்டுகள் சிறை

சிறுவனை மிரட்டி பாலியல் வன்கொடுமை இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

வாரிசு சான்று வழங்க ரூ.500 லஞ்சம் ஓய்வுபெற்ற விஏஓவுக்கு 2 ஆண்டுகள் சிறை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

