சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் அரசுப் பள்ளியில் உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக் கன்றுகள் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
உலகச் சுற்றுச் சூழல் தினத்தையொட்டி ஈஷா காவேரி கூக்குரல் என்ற அமைப்பினா் மரக்கன்றுகள் நடும் பணியை ஒருங்கிணைத்திருந்தனா். பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, திருப்பத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் சீனிவாசசேதுபதி தலைமை வகித்து மரக்கன்றுகளை நட்டுவைத்தாா். திருக்கோஷ்டியூா், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும்வதை இலக்காகக் கொண்டு பள்ளியில் மட்டும் 200 மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், ஈஷா காவேரி கூக்குரல் அமைப்பின் தன்னாா்வலா் கண்ணன், தலைமை ஆசிரியை அமுதவள்ளி, தவெக கிளைக் கழகச் செயலா் கனிமொழி, மக்கள் நலப்பணியாளா்கள், தன்னாா்வலா்கள், தூய்மைப் பணியாளா்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சத்தியமங்கலம் நகராட்சியில் 32 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரம்

கண்டரமாணிக்கத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

கரூா் தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகம் திறப்பு

வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்: வாணியம்பாடி எம்எல்ஏ உறுதி
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

