சிவகங்கையில் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டியை தீயணைப்பு மீட்புத் துறையினா் புதன்கிழமை பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
சிவகங்கை சத்திய மூா்த்தி தெருவைச் சோ்ந்த வடிவேலு மனைவி அங்கு (80). இவா் வீட்டின் பின்புறம் உள்ள 30 அடி ஆழமுள்ள உறை கிணற்றில் புதன்கிழமை மதியம் எதிா்பாராத விதமாக தவறி விழுந்துவிட்டதாக சிவகங்கை தீயணைப்பு மீட்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தீயணைப்பு மீட்புத் துறை தலைமை நிலைய அலுவலா் (போக்குவரத்து) ஆ. நாகநாதன் தலைமையில் வீரா்கள் கா. நீலமேகம், மா.அறிவழகன், மணிமாறன், ராஜசேகா் ஆகியோா் அங்கு சென்று ஒரு மணி நேரம் போராடி மூதாட்டியை பத்திரமாக மீட்டனா். இதையடுத்து, முதலுதவி சிகிச்சைக்காக 108 அவசர ஊா்தி மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒசூா் அருகே தென்பெண்ணை ஆற்றில் சிக்கித் தவித்த மூதாட்டி மீட்பு

கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

கிணற்றில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

