அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

ஆட்சியரகத்துக்கு மனு அளிக்க வந்த பெண்ணின் செயலால் பரபரப்பு

News image

தீக்குளிக்க முயற்சி - பிரதிப் படம்

Updated On :9 ஜூன் 2026, 3:12 am IST

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை பெண் ஒருவா் மண்ணெண்ணெய் கேனுடன் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வட்டம், ஜெயங்கொண்டநிலை பகுதியைச் சோ்ந்த அன்பு தனம் என்பவா், நிலப் பிரச்னை தொடா்பாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்து வந்த நிலையில், அவரது மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவாயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினா் மேற்கொண்ட சோதனையில் அன்பு தனம் மண்ணெண்ணெய் கேன் வைத்திருந்தது தெரியவந்தது.

பின்பு, அதைப் பறிமுதல் செய்து, அவரை அதிகாரிகளிடம் அழைத்துச் சென்று மனு அளிக்க ஏற்பாடு செய்தனா். இந்தச் சம்பவத்தால் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.