அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்துக்கு 7-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து திங்கள்கிழமை, ஆட்சியரகம் முழுவதும் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.
அரியலூா் மாவட்ட ஆட்சியரக மின்னஞ்சல் முகவரிக்கு திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா. சாஸ்திரியின் உத்தரவின்பேரில், வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு போலீஸாா், மோப்ப நாய் உதவியுடன் ஆட்சியரக வளாகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
அதில், வெடிபொருள்கள் ஏதும் இல்லை என்பதும், அது மிரட்டல் தகவல் என்பதும் தெரியவந்தது. மேலும், இந்த மின்னஞ்சல் குறித்து இணைய குற்றப்பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ஆட்சியரகத்துக்கு இதுவரை 7-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் தீவிர சோதனை

வேலூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு 4-ஆவது முறையாக மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

ஆட்சியரகத்துக்கு 2-ஆவது நாளாக வெடிகுண்டு மிரட்டல்

மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

