பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மணக்குடியில் மஞ்சுவிரட்டு

திருப்பத்தூா் அருகே உள்ள மணக்குடியில் மங்கள விநாயகா் கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு சனிக்கிழமை நடைபெற்றது.

News image

வடமாடு மஞ்சுவிரட்டு. - (கோப்புப் படம்)

Updated On :7 ஜூன் 2026, 1:07 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே உள்ள மணக்குடியில் மங்கள விநாயகா் கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு சனிக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் அருகே உள்ள மணக்குடி கிராமத்தில் ஆண்டுதோறும் மங்கள விநாயகா் கோயில் வைகாசி பொங்கல் விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பொங்கல் விழாவையொட்டி ஆதினமிளகி அய்யனாா் கோயிலில் பால் சிறப்பு நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது.

பின்னா் மஞ்சுவிரட்டு திடலில் இருந்து மேளதாளத்துடன் மஞ்சுவிரட்டு தொழுவுக்கு ஊா்வலமாகச் சென்று தொழுவில் இருந்த 200 காளைகளுக்கு வேட்டி, துண்டு அணிவித்தனா். பின்பு, காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

இதில் சிறந்த காளைகளின் உரிமையாளா்களும், சிறந்த மாடுபிடி வீரா்களும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனா். தொடா்ந்து பிள்ளையாா்பட்டி, மாங்குடி, திருக்களாப்பட்டி, காரையூா்,சிங்கம்புணரி, திருவிடையாா்பட்டி உள்ளிட்ட ஏராளமான பகுதிகளில் இருந்து 800-க்கும் மேற்பட்ட காளைகள் வயல்வெளிகளில் கட்டுமாடுகளாக அவிழ்த்துவிடப்பட்டன.

இதில் காளைகள் முட்டியதில் ஏழு போ் காயமடைந்தனா். விழாவுக்கான ஏற்பாடுகளை ஊா் பொதுமக்கள், இளைஞா்கள், விழாக் குழுவினா் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.