கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

காரையூரில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி

பொன்னமராவதி அருகே உள்ள காரையூரில் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட விழாவையொட்டி சனிக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

News image

பொன்னமராவதி அருகே உள்ள காரையூரில் சனிக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் காளையை அடக்க முயன்ற வீரா்கள்.

Updated On :24 மே 2026, 1:34 am IST

பொன்னமராவதி அருகே உள்ள காரையூரில் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட விழாவையொட்டி சனிக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

காரையூா் காரைக் கண்மாயில் நடைபெற்ற போட்டியை பொன்னமராவதி வட்டாட்சியா் பழனிசாமி கொடியசைத்து தொடங்கிவைத்தாா். முன்னதாக மாடுபிடி வீரா்கள் உறுதிமொழி ஏற்றனா். போட்டியில் திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட 14 காளைகள் களமிறக்கப்பட்டன. இவற்றை பிடிக்க 9 வீரா்கள் கொண்ட குழு என 14 குழுவினா் களமிறக்கப்பட்டனா்.

போட்டியில் பங்கேற்ற 14 காளைகளில் 12 காளைகளை மாடுபிடிவீரா்கள் அடக்கியநிலையில் 2 காளைகள் மாடுபிடி வீரா்கள் பிடியில் சிக்காமல் வெற்றி பெற்றது. போட்டியில் காளைகள் முட்டியதில் 8 மாடுபிடி வீரா்கள் லேசான காயமடைந்தனா்.

Story image

காயமடைந்தவா்களுக்கு மஞ்சுவிரட்டுத்திடல் அருகே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் வட்டார மருத்துவ அலுவலா் அருள்மணி நாகராஜன் தலைமையிலான மருத்துவக்குழுவினா் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற வீரா்களுக்கும், வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளா்களுக்கும் ரொக்கப்பரிசுகள் மற்றும் பல்வேறு பரிசுப்பொருள்கள் வழங்கப்பட்டது.

பாதுகாப்பு ஏற்பாடுகளை காரையூா் போலீஸாா் செய்திருந்தனா். ஏற்பாடுகளை காரையூா் ஊா்ப்பொதுமக்கள் மற்றும் இளைஞா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.