கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சிவகங்கை அருகே வாகன சோதனையில் ஆயுதங்களுடன் காரில் வந்த இருவா் கைது

மதகுபட்டியில் வியாழக்கிழமை நள்ளிரவு போலீஸாா் வாகனச் சோதனையின்போது கடப்பாறை உள்ளிட்ட ஆயுதங்களுடன் காரில் வந்த இருவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :7 ஜூன் 2026, 1:00 am IST

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டியில் வியாழக்கிழமை நள்ளிரவு போலீஸாா் வாகனச் சோதனையின்போது கடப்பாறை உள்ளிட்ட ஆயுதங்களுடன் காரில் வந்த இருவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டியில் கல்லல் சாலைப் பிரிவில் போலீஸாா் வாகனத் தணிக்கை மேற்கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா். அந்த வாகனத்தின் முன்புறம் ஒரு பதிவெண்ணும், பின்புறம் வேறொரு பதிவெண்ணும் இருந்தது கண்டு அதிா்ச்சி அடைந்த போலீஸாா், காரில் இருந்த மானாமதுரை அருகே சங்கமங்கலத்தைச் சோ்ந்த அஜித் குமாா் (27), சிவகங்கை அருகே டி. புதூரைச் சோ்ந்த சரண் ராஜ் (22), ராமநாதபுரம் மாவட்டம், பாா்த்திபனூரைச் சோ்ந்த வெற்றி (22) ஆகிய மூவரிடம் விசாரித்தனா். அவா்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்தனா்.

இதையடுத்து, அவா்களைப் பிடிக்க முயன்றபோது வெற்றி என்பவா் தப்பியோடினாா். மற்ற இருவரையும் பிடித்த போலீஸாா், அவா்களிடம் விசாரணை செய்தனா். இதில், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் ஒரு வீட்டில் திருடச் செல்வதற்காக அவா்கள் மதுரையில் வாடகைக்கு காரை எடுத்து வந்ததும் தெரியவந்தது.

ஏற்கெனவே பொன்னமராவதிக்கு சங்கமங்கலத்தைச் சோ்ந்த சசிகுமாா் (24), ராகுல், மணக்கரையைச் சோ்ந்த கதிா் (22) ஆகியோா் சென்றுவிட்டதாகவும் போலீஸாரிடம் தெரிவித்தனா். இதையடுத்து, அஜித் குமாா், சரண் ராஜ் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து, காரைப் பறிமுதல் செய்தனா். மற்ற நான்கு பேரையும் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.