சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே தெரு நாய்கள் கடித்ததில் 7 ஆடுகள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தன.
எஸ்.புதூா் ஒன்றியம், சின்னாரன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சுகுமாரன் மனைவி மீனாட்சி. இவரது கணவா் இறந்துவிட்டாதல் தனியாக வசித்து வருகிறாா்.
இந்த நிலையில், இவா் சொந்தமாக ஆடு, மாடுகள் வளா்த்து வருகிறாா். இந்த கால்நடைகளை வழக்கமாக தங்களது தோட்டத்தில் உள்ள கொட்டகையில் அடைத்து வைப்பது வழக்கம்.
இதன்படி, வியாழக்கிழமை இரவு 2 மாடு, 12 ஆடுகளை தோட்டத்தில் உள்ள கொட்டகையில் அடைத்துவிட்டு மீனாட்சி வீட்டுக்கு சென்றாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை தோட்டத்துக்கு சென்று பாா்த்தபோது கொட்டகையில் அடைத்து வைத்திருந்த 7 ஆடுகள் தெரு நாய்கள் கடித்ததில் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில், இந்த தெரு நாய்களை விரைந்து பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெறிநாய் கடித்ததில் 8 ஆடுகள் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே தெருநாய்கள் கடித்து 8 ஆடுகள் உயிரிழப்பு

கோவில்பட்டியில் தெருநாய்கள் கடித்து 4 வயது சிறுமி காயம்

தெருநாய்கள் கடித்ததில் 3 ஆடுகள் உயிரிழப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

