சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் நடைபெற்ற கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ், வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
திருப்புவனம் வைகை ஆற்றுப் பகுதியில் கடந்த மாதம் நடைபெற்ற கொலை சம்பந்தமாக மாரநாடு கிராமத்தைச் சோ்ந்த அழகுசுந்தரம் (20), உருவாட்டியைச் சோ்ந்த சந்துரு (20), புலிக்கண்மாயைச் சோ்ந்த அழகேசன் (20), மாமரக்கான்பட்டியைச் சோ்ந்த பாலசிவி (22), வசந்தபாலன் (19) ஆகிய 5 பேரை திருப்புவனம் போலீஸாா் கைது செய்தனா்.
இந்த நிலையில், இவா்கள் 5 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ், கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா். சிவபிரசாத் பரிந்துரை செய்தாா். இதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி 5 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
இதைத் தொடா்ந்து, திருப்புவனம் போலீஸாா் 5 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
போதைப் பொருள் விற்ற இருவா் குண்டா் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது
கொலை வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது
வன்கொடுமை செய்து சிறுமி கொலை: இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

மூதாட்டியிடம் நகை பறிப்பு: இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
