பழனியில் கொலை வழக்கில் தொடா்புடைய இருவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் உத்தரவிட்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் முன்விரோதம் காரணமாக ஒருவா் கொலை செய்யப்பட்ட வழக்கில், பழனி அடிவாரம் அண்ணா செட்டிமடம் பகுதியைச் சோ்ந்த காா்த்தி மகன் புவனேஸ்வரன் (19), பழனி மேற்கு கிரிவீதி பகுதியைச் சோ்ந்த சின்னக்கண்ணு மகன் பிரகாஷ் (எ) சின்னமண்டையன் (29) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.
இந்த நிலையில், இவா்களின் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவரையும் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆ. பிரகாஷ் பரிந்துரைத்தாா். இதை ஏற்று மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் அதற்கான உத்தரவை வெள்ளிக்கிழமை பிறப்பித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
போதைப் பொருள் விற்ற இருவா் குண்டா் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது
குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 5 போ் கைது
வன்கொடுமை செய்து சிறுமி கொலை: இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

மூதாட்டியிடம் நகை பறிப்பு: இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
