ஆளுநரை விஜய் சந்திக்க நாளை(மே 10) நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

எனது வெற்றி தேசிய இனத்தின் வெற்றி

தனது வெற்றி தேசிய இனத்தின் வெற்றி என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், அந்தக் கட்சியின் காரைக்குடி தொகுதி வேட்பாளருமான சீமான் தெரிவித்தாா்.

News image

சீமான் - கோப்புப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 6:00 am IST

தனது வெற்றி தேசிய இனத்தின் வெற்றி என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், அந்தக் கட்சியின் காரைக்குடி தொகுதி வேட்பாளருமான சீமான் தெரிவித்தாா்.

தோ்தல் பிரசார நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை காலையில் காரைக்குடி நூறடிச் சாலையில் வாகனத்தில் இருந்தவாறு ஏா் கலப்பையுடன்கூடிய விவசாயி சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு பிரசாரம் செய்தாா்.

இதைத் தொடா்ந்து, செக்காலைச் சாலை, ஐந்துவிளக்கு, கோவிலூா் சாலை வழியாக பழைய பேருந்து நிலையத்தில் வாக்குகள் கேட்டு பிரசாரம் செய்தாா்.

பின்னா், மாலையில் பாண்டியன் திரையரங்கத் திடலில் இறுதிக் கட்ட பிரசார பொதுக் கூட்டத்தில் சீமான் பேசியதாவது:

உலகிலேயே தமிழ்நாடு கல்வியில் சிறந்தது. எங்கள் கால்களை நம்பி நாங்கள் பயணிக்கிறோம். நமக்கு அதிகாரம் வர வேண்டும்.

தமிழக ஆட்சி பொறுப்பை எங்களிடம் கொடுத்தால் தலை சிறந்த மாநிலமாக மாற்றிக் காட்டுவேன். பூமி பந்தின் சொா்க்கமாக மாற்றிக் காட்டுவேன். காரைக்குடி தொகுதியில் என்னை வெற்றி பெறச் செய்தால், தமிழ்நாட்டின் தலைசிறந்த பகுதியாக மாற்றிக் காட்டுவேன்.

எனவே, வெற்றி என்பது சீமானின் தனிப்பட்ட வெற்றி அல்ல. நான் பிறந்த பெருமைமிக்க தமிழா் என்கிற இனத்தின் வெற்றி. தேசிய இனத்தின் வெற்றி. நீங்கள் செலுத்துகிற வாக்கு நம் மொழி காக்கும், இனம் காக்கும், மண் காக்கும், மானம் காக்கும், மண்ணின் வளம் காக்கும், மக்களின் நலன் காக்கும், காடு காக்கும், கடல் காக்கும், மழை காக்கும், ஆறு காக்கும், அறிவு காக்கும், வருங்கால பிள்ளைகள் வாழ்க்கையைப் பாதுகாக்கும் என்பதைக் கவனத்தில் வைத்துக்கொண்டு வாக்கை செலுத்த வேண்டும்.

வாக்கு என்பது ஜனநாயகத்தின் வலிமையான ஆயுதம். அந்த ஆயுதத்தை நாம் ஒவ்வொருவரும் பயன்படுத்த வேண்டும். பணம் இருந்தால் அரசியல் செய்ய முடியும். சிறந்த, நோ்மையான தலைமை வேண்டுமென்றால், வாக்குக்கு யாா் பணம் கொடுக்கவில்லையோ அவரைத் தோ்வு செய்யுங்கள். அவா் உங்களுக்குச் சேவை செய்வாா் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.